உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 09, 2010

தேர்வில் 'பிட்': 31 பேர் வெளியேற்றம்

கடலூர் : 

                நேற்று நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில் கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் "பிட்' அடித்த 31 பேர் பிடிபட்டனர்.
 
                பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த 1ம் தேதி துவங்கியது. நேற்று இயற்பியல், பொருளியல், உளவியல் தேர்வுகள் நடந்தது.  கடலூர் மாவட்டத்தில் பறக் கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதில் காட்டுமன் னார்கோவில் பருவதராஜ குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய தனித் தேர்வர்கள் 3 மாணவர்கள், 7 மாணவிகள், பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் 4 பேரும் பிடிபட்டனர். கண்டமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒரு மாணவரும், 4 மாணவிகளும், பண்ருட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒரு மாணவரும் "பிட்' அடித்தபோது பிடிபட்டனர். மாவட்டத்தில் இதுவரை "பிட்' அடித்ததாக  20 மாணவிகளும், 8 மாணவர்களும் பிடிபட் டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
விழுப்புரம்:. 

                சி.இ.ஓ., குப்புசாமி தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அதில், திருக்கோவிலூர் ஞானானந்தா மெட்ரிக் பள்ளியில் தனித் தேர்வர்கள் (பொருளியல்) இருவர், விரியூர் அடைக்கல அன்னை மேல் நிலைப் பள்ளியில் ஒரு மாணவர் (இயற்பியல்), திண்டிவனம் வால்டர்ஸ் கேடர் பள்ளியில் 8 தனித் தேர்வர்கள் (இயற்பியல்- 2, பொருளியியல்-6) என மொத்தம் 11 பேர் "பிட்' அடித்தபோது சிக்கினர். "பிட்' அடித்து சிக்கிய 31 பேரும் தேர்வறையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும், அவர்களின் விடைத் தாள்கள் மேல் நடவடிக்கைக்கு சென்னை அரசு தேர்வுகள் இயக்கத் திற்கு அனுப்பி வைக்கப் பட்டது.   

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior