உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 09, 2010

சமையலர் இல்லாததால் அங்கன்வாடி முடங்கியது

நெல்லிக்குப்பம் : 

               பல்வராயநத்தம் ஊராட்சியில் பால்வாடி சமையலர் இல்லாததால் அங்கன் வாடி மையம் செயல்படாமல் உள்ளது.
 
              அண்ணாகிராமம் ஒன்றியம் பல்வராயநத்தம் ஊராட்சியில் இருளர் குடியிருப்பு, தொட்டி இரண்டு இடங்களில் அங்கன்வாடி குழந்தைகள் மையம் செயல்பட்டது. இருளர் குடியிருப்பில் சமையலர் ஓய்வு பெற்ற பிறகு புதியதாக யாரும் நியமிக்கப்படவில்லை. அங்கு கட்டடம் வசதி இல்லாததால் மரத்தடியில் செயல்பட்டது. அங்கன்வாடி ஆசிரியரும் தொட்டி அங்கன்வாடிக்கு சென்று விடுகிறார். இதனால் இருளர் குடியிருப்பு அங்கன்வாடிக்கு குழந்தைகள் வருவதில்லை. தொட்டி மையத் திலேயே சமையல் செய்து எடுத்து வந்து இருளர் குடியிருப்பு பகுதி குழந்தைகளுக்கு தருகின்றனர். உணவு வரும் சமயத்தில் மட்டுமே குழந்தைகள் வருகிறார்கள். கட்டிட வசதி செய்து சமையலர் நியமித்தால் மட்டுமே இருளர் குடியிருப்பு அங் கன்வாடி செயல்பட வாய்ப்புள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior