உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 09, 2010

விழிப்புணர்வு பிரசாரம்

திட்டக்குடி :

              திட்டக்குடி பஸ் நிலையத்தில் நடந்த தில்லு துர எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரத்தை சேர்மன் துவக்கி வைத்தார்.
 
               திட்டக்குடி தாலுகாவில் "தில்லுதுர' வாகனம் விழிப்புணர்வு பிசாரம் மேற்கொண்டது. பஸ் நிலையத்தில் துவங்கிய பிரசாரத்திற்கு, அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் மங்கையர்கரசி முன்னிலை வகித்தார். மருத்துவமனை எய்ட்ஸ் பிரிவு பொறுப்பாளர் ராஜேந்திரன் வரவேற்றார். பேரூராட்சி தலைவர் மன்னன் துவக்கி வைத்து பேசினார். இதில் எய்ட்ஸ் நோயின் பாதிப்புகள், அறிகுறிகள், தடுக்கும் வழிமுறைகள், இலவச ஆலோசனைகள் குறித்து கலைக்குழுவினர் கலைநிகழ்ச்சி மூலம் பிரசாரம் செய்தனர். ஆற்றுப்படுத்துனர் வெங்கடாசலபதி, ஆய்வக நுட்புனர் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior