உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 09, 2010

லாரி மீது மொபட் மோதி விபத்து சிறுவன் பலி: மூவர் படுகாயம்


விருத்தாசலம் : 

                விருத்தாசலத்தில் லாரி மீது மொபட் மோதியதில் சிறுவன் தலை நசுங்கி இறந்தார்.  மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
 
                விருத்தாசலம் அடுத்த முதனை கிராமத்தை சேர்ந்தவர்கள் செம்புலிங்கம் மகன் வீரமுத்து (35), செல்வராசு மகன் அய்யப்பன் (19), ராமசந்திரன் மகன் தமிழரசன்(12), வேல்முருகன் மகன் விஜய்(12). இதில் தமிழரசன், விஜய் இருவரும் அதே கிராமத்தில் எட்டம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் நான்கு பேரும் நேற்று மாலை உறவினரின் குழந்தையை பார்க்க மொபட்டில் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு வந்துக் கொண்டிருந்தனர். விருத்தாசலம் பெரியார் நகர் அருகே வந்தபோது, எதிரே வந்த லாரி மீது மொபட் மோதியது. அதில், மொபட்டின் முன்னாள் உட்கார்ந்து வந்த மாணவன் விஜய் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தான். மற்ற மூவரும் படுகாயமடைந்தனர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மூவரும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior