உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 11, 2010

கிருஷ்ணங்குப்பம் கிராமத்தில் 24ம் தேதி மனுநீதி நாள் முகாம்

கடலூர் : 

              கிருஷ்ணங்குப்பத்தில் வரும் 24ம் தேதி மனு நீதி நாள் முகாம் நடக்கிறது.
 
                  குறிஞ்சிப்பாடி தாலுகா கிருஷ்ணங்குப்பத்தில் வரும் 24ம் தேதி டி.ஆர்.ஓ.,  நடராஜன் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடக்கிறது. அதனையொட்டி பொதுமக்களிடம் மனுக்கள் பெறுவதற்காக கிராம நிர்வாக அலுவகத்தில் தபால் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று (11ம் தேதி) காலை 10 மணிக்கு வருவாய்த்துறை மற்றும் இதர துறை அலுவலர்கள் நேரில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற உள்ளார்கள். பெறப்படும் மனுக்கள் மீது எடுத்த நடவடிக்கை விபரத்தை மனுநீதி நாளன்று தெரிவிக்கப்படும். மேலும் மனுநீதி நாளன்று கிராம மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாம், விவசாய திட்டங்களின் செயலாக்கம், ஊட்டச்சத்து மற்றும் சிறுசேமிப்பு ஆகிய துறைகளின் கண்காட்சி, செயல் விளக்கங்களை சம்மந்தப் பட்ட துறையினர் செய்து காண்பித்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior