உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 11, 2010

வருவாய்த்துறை அலுவலர் சங்கம் உணவு இடைவேளை பிரசாரம்

திட்டக்குடி : 

           திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் உணவு இடைவேளை பிரசாரம் மேற் கொண்டனர்.
 
            வருவாய்த்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புதல், மேம்படுத்தப் பட்ட ஊதியம் மற்றும் சிறப்பு ஊதியம் 30 சதவீதம் வழங்குதல் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திட்டக் குடி தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் உணவு இடைவேளை பிரசார இயக்கம் நடந்தது. வட்டத்தலைவர் அண்ணாதுரை தலைமை தாங் கினார். மாவட்ட துணைத் தலைவர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். இணை செயலாளர் கோடி வரவேற்றார். ரத்தினகுமார், சிவா வாழ்த்தி பேசினர். மாவட்ட தலைவர் எழிலன் தீர்மானங்களை வலியுறுத்தி பேசினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior