உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 11, 2010

ஒரு லட்சம் நகை, பணம் திருட்டு : மர்ம ஆசாமிகளுக்கு வலை

பரங்கிப்பேட்டை : 

               வீடு புகுந்து ஒரு லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.
 
                   கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அடுத்த ஆணையாங்குப்பத்தை சேர்ந்தவர் சாந்தா (50). இவர் தனது மகள் புஷ்பவள்ளியை வீட்டில் விட்டுவிட்டு நெல் அறுவடைக்கு வயலுக்கு சென் றுள்ளார். வெளிநாட்டில் இருந்து போன் வந்ததால் புஷ்பவள்ளி வீட்டை பூட்டி வெளியில் இருந்த நாற்காலியில் சாவியை  வைத்துவிட்டு மொபைலை எடுத்துக்கொண்டு வயலுக்கு சென்றார். சற்று நேரம் கழித்து வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோ வைத்திருந்த 10 சவரன் நகை, ரொக்கம் 15 ஆயிரம், வெள்ளி கொளுசு  மற்றும் மொபைல் போன் திருடு போயிருந்தது. இதுகுறித்து சாந்தா கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior