உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 11, 2010

போதையில் வாகனம் ஓட்டினால் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கிள்ளை :

              போதையில் வாகனம் ஓட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விவசாய சங்கத் தலைவர் ரவீந்திரன் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:   

                       சிதம்பரத்தில் இருந்து சி.முட்லூர் வழியாக பி.முட்லூர் வரை  சாலை மேம்பாட்டுத்திட்டத்தில் சாலை அகலப்படுத்தும் பணி நடக்கிறது. குருமாந் திட்டில் இருந்து  சி.முட் லூர் அரசு கல்லூரி வரை  தார் சாலையாக அமைக்கப் பட்டுள்ளது. மற்றப்பகுதியில் சாலை அமைக்கும் பணி  நடந்து வரும் நிலையில் இருசக்கர வாகனங்கள், மினிலாரி உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசலால் விபத்து ஏற்படுகிறது. நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வேகமாண வந்தவர், சாலையில் சைக்கிளில் சென்றவர் மீது மோதி பலத்த காயத்துடன் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.  இப்பகுதியில் தினசரி ஏற்படும் விபத்தை கட்டுப் படுத்தும் வகையில்  சாலையில் பேரிகார்டு அமைப்பதுடன், குடி போதையில் வாகனம் ஓட்டுவர்களின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior