உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 11, 2010

சிறுபான்மையினர் ஆணையம் இன்று கடலூர் வருகை

கடலூர்:

        மாநில சிறுபான்மையினர் நல ஆணையம் வியாழக்கிழமை ​(மார்ச் 11) கடலூர் வருகை தர இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் புதன்கிழமை அறிவித்தார்.​ ​ 

இது குறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:​ 

                அருள்திரு வின்சென்ட் சின்னதுரை தலைமையிலான மாநில சிறுபான்மையினர் ஆணையம்,​​ வியாழக்கிழமை கடலூர் வருகிறது.​ காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களின் தலைவர்களையும் மக்கள் பிரதிநிதிகளையும் ஆணையம் சந்திக்க உள்ளது.​ சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களையும் பார்வையிடவும் ​ அவர்களின் குறைகள் மற்றும் ஆலோசனைகளைக் கேட்டறியவும் உள்ளனர்.​ ​சிறுபான்மை சமூகத்தினர் தங்கள் குறைகளையும்,​​ ஆலோசனைகளையும் நேரில் தெரிவிக்கலாம் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior