உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 11, 2010

அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் ஊதியம் வழங்கக் கோரி உண்ணாவிரதம்

விருத்தாசலம் : 

                    விருத்தாசலம் கொளஞ் சியப்பர் அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் மூன்று மாதம் ஊதியம் வழங்கக்கோரி உண்ணாவிரதம் இருந்தனர்.
 
                     தமிழகம் முழுவதும் உள்ள அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் செய்யகோரியும், மூன்று மாதமாக வழங்காமல் உள்ள ஊதியத்தை வழங்க கோரியும் வகுப்பு புறக்கணிப்பு, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் மண்டல தலைவர் கதிர்வேல் தலைமையில் 8, 9 ஆகிய தேதிகளில் வகுப்பு புறக்கணிப்பு உள்ளிருப்பு போராட் டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று வகுப்புகளை புறக் கணித்து உண்ணாவிரதம் இருந்தனர். கிளை தலைவர் மன்னார்சாமி, செயலாளர் மருதமுத்து, பொரு ளாளர் சம்பத் உள்ளிட்ட 13 பேர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.
 
கடலூர்: 

                 அரசு பெரியார் கல்லூரியில் சுய நிதி பாடப்பிரிவில் பணிபுரியும்  கவுரவ விரிவுரையாளர்கள் நடேசன் தலைமையில் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக கணிதம், இயற்பியல், வேதியியல் பாடப் பிரிவு மாணவ, மாணவிகள்  ஒரு நாள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior