உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 11, 2010

வாலிபர் அடித்து கொலை சக தொழிலாளி கைது

குறிஞ்சிப்பாடி : 

               குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் காஸ் அடுப்பால் தாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்டார்.
 
                விருத்தாசலம் அடுத்த சாத்தப்பாடியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. போர்வெல் வேலை செய்து வருபவர். இவரும் அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன்(23), மாயி (எ) பாலமுருகன்(25) மற்றும் சிலர் வடலூர் நரிக்குறவர் காலனி அருகே தனியார் இடத்தில் தங்கி கடந்த 10 நாளாக போர்வெல் போடும் பணியில் ஈடுபட்டனர். கடந்த 8ம் தேதி இரவு அனைவரும் மது அருந்தினர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த மாயி சமையல் செய்வதற்காக வைத்திருந்த இரும்பு காஸ் அடுப்பை எடுத்து பாலமுருகன் தலையில் தாக்கினார். படுகாயமடைந்த அவர் நெய்வேலி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று முன்தினம் இறந்தார். உடன் பாலமுருகனின் உடல் சாத்தப்பாடிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவரது உறவினர்கள் நடந்த சம்பவம் குறித்து  கம்மாபுரம் போலீசில் புகார் செய்தனர். சம்பவம் நடந்தது  வடலூர் போலீஸ் சரகப் பகுதி என்பதால்  கம்மாபுரம் போலீசார், வடலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நெய்வேலி இன்ஸ்பெக்டர் சேகர், வடலூர் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற் றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு சாத்தப்பாடிக்கு சென்று பாலமுருகனில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வடலூர் போலீசார் வழக்கு பதிந்து மாயியை கைது செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior