உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 11, 2010

ஆஸ்பெட்டாஸ் ஓடுகளால் குழந்தைகளின் உடல்நிலை பாதிப்பு

நடுவீரப்பட்டு : 

               தமிழகத்தில் உள்ள குழந்தைகள் மையத்தின் கட்டடங்கள் பெரும்பாலும் "ஆஸ்பெட்டாஸ்' எனப்படும் கல்நார் ஓடுகளால் உள்ளதால் குழந்தைகள் மிகவும் பாதிக் கப்பட்டு வருகின்றனர்.
 
               தமிழகத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் அந்தந்த பகுதியில் உள்ள குழந்தைகள் நலனை கருத்தில் கொண்டு அதே பகுதிகளில் குழந்தைகள் மையங்கள் அமைத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த மையத்தில் ஒரு ஊழியர் மற்றும் ஒரு சமையல் உதவியாளர் உள்ளார்கள். அவர்கள் அப்பகுதியில் பள்ளி செல்ல வயது வராத பிள்ளைகளுக்கு மதிய உணவு மற்றும் கல்வி கற்று தருகின்றனர். அந்த குழந்தைகள் மைய கட்டடம் "ஆஸ்பட்டாஸ்' எனப் படும் கல்நார் ஓடுகளால் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆஸ்பெட்டாஸ் ஓடுகள் சுற்று சூழலை மாசுபடுத்துவதோடு, குழந்தைகளின்  உடல் நலத்திற்கும் தீங்கு விளைவித்து வருகிறது. ஆஸ் பெட்டாஸ் ஓடுகளில் படும் சூரிய ஒளி அந்த கடும் வெயிலை சேகரித்து வைத்து நாள் முழுவதும் அந்த வெயிலின் தாக் கத்தை உள்ளே இறக்குகி வருகிறது. இதனால் குழந் தைகளுக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கிறது. மேலும், தோல் வியாதி வரக்கூடிய ஆபத்தும் உள்ளது. குழந்தைகள் மையத்தில் உள்ள கழிவறை மிகவும் குறைந்த உயரம் உள்ளதால் அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் கழிவறை செல்ல மிகவும் அவதிப்பட்டுவருகின்றனர். கல்வித்துறையில்  அடுக்கடுக்காக பல மாற் றங்களை கொண்டு வரும்  தமிழக அரசு குழந்தைகைள் மற்றும் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆஸ்பெட்டாஸ் ஓடுகளை கலைந்து "கான்கிரீட்' கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior