உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 11, 2010

புவனகிரியில் மா.கம்யூ., உண்ணாவிரதம்


புவனகிரி : 

                 புவனகிரி வெள்ளாற்றில் தடுப்பு சுவர் அமைக்க கோரி மா.கம்யூ.,வினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
 
              புவனகிரி வெள்ளாற் றில் தடுப்பு சுவர் அமைக்ககோரி பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத பொதுப்பணித்துறையை கண்டித்து மா.கம்யூ., சார்பில் புவனகிரி பாலம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. பேரூராட்சி கவுன்சிலர் மணவாளன் தலைமை தாங்கினார். முரளி, மகேந்திரன், ராஜன், தட்சிணாமூர்த்தி, ராஜேஷ், சேஷாத்திரி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்து பேசினார். விவசாய சங்க மாவட்ட துணை தலைவர் ராஜாராமன், கற்பனைசெல்வம், புவனகிரி நகர செயலாளர் ராமலிங்கம், சதானந்தம், வெற்றிவேல், கதிர்வேல், ஆனந்தி உள்ளிட்ட பலர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். மாவட்ட செயலாளர் ஆறுமுகம் உண்ணாவிரதத்தை முடித்து வைத்து பேசினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior