உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 11, 2010

நடுவீரப்பட்டு பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதி

நடுவீரப்பட்டு : 

            நடுவீரப்பட்டு மெயின் ரோட்டில் உள்ள சின்டக் டேங்க் பழுதடைந்துள்ளததால் குடிநீர் வீணாகி வருகிறது.
 
                  நடுவீரப்பட்டு ஊராட் சியில் ஒன்றிய நிதியில் மெயின் ரோட்டில் இரண்டு சின்டக் டேங்க் வைத்து  மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றி சப்ளை செய்யப்பட்டது.  இதில் ஒரு டேங்க் சில தினங்களாக பழுதடைந்து தண்ணீர் முழுவதும் வெளியேறி விடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் தண்ணீர் முழுவதும் அப்பகுதியில் தேங்கி நிற்பதால் கொசு உற் பத்தி அதிகரித்து வருகிறது. இதனை அதிகாரிகள் கவனித்து, டேங்கை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior