உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 11, 2010

ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தினர் உண்ணாவிரதம்

நெய்வேலி:
 
                   நெய்வேலி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஸ்கியூபாலம் அருகே புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் தொடர்பாக மத்திய அமைச்சர் முன்னிலையில் 2 ஆண்டுகளுக்கு முன் புதுதில்லியில் நடந்த ஒப்பந்தத்தை அமல்படுத்த வலியுறுத்தி நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கச் செயலர் வெங்கடேசன் தலைமை வகித்தார். சங்கத்தின் இதர நிர்வாகிகள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்திப் பேசினார்.​ ஏஐடியுசி மாவட்டச் செயலர் சேகர் கண்டன உரையாற்றி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.​ உண்ணாவிரதத்தில் 150 பேர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior