உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 11, 2010

அரசு பஸ் மோதி வாலிபர் பலி : டிரைவருக்கு 4 மாதம் சிறை

ராமநத்தம் : 

                பஸ் மோதி வாலிபர் இறந்த வழக்கில் டிரைவருக்கு 4 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
 
                         பெரம்பலூர் மாவட்டம் திருவாலந்துறையை சேர்ந்தவர் பழனிமுத்து மகன் கொளஞ்சி (24). இவர் கடந்த 2008 மார்ச் 21ம் தேதி திட்டக்குடி அடுத்த லட்சுமணபுரம் செல்வதற்காக ராமநத்தம் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தார். அப்போது அந்த வழியே வந்த அரசு பஸ் மோதியது. அதில் கொளஞ்சி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார், அரசு பஸ் டிரைவரான கம்மாபுரத்தை சேர்ந்த செந்தில்குமாரை கைது செய்தனர். அவர் மீது திட்டக்குடி கோர்ட் டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ரமேஷ்பாபு, விபத்து ஏற்படுத்திய டிரைவர் செந்தில்குமாருக்கு 4 மாதம் சிறை தண்டனை மற்றும் 3 ரூபாய் அபராதம் விதித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior