உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 11, 2010

'பிட்'அடிக்கும் மாணவர்கள் சிக்கினால் கண்காணிப்பாளர் மீது கடும் நடவடிக்கை

கடலூர் : 

               பறக்கும்படையினரிடம் "பிட்' அடிக்கும் மாணவர்கள் பிடிபட்டால் தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அமுதவள்ளி எச்சரித்துள்ளார்.
 
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: 

                தற்போது நடக்கும் பிளஸ் 2 பொது தேர்வில் அரசு அறிவித்தபடி தேர்வு மையத்தில் விடைகளை துண்டு சீட்டில் எழுதி வைத்திருத்தல், விடை தாள்களை மாற்றிக் கொள் வது, வினாத் தாள்களில் குறிப்பு எழுதுவது போன்ற குற்றங்களில் ஈடுபடும் மாணவர்கள் மூன்று ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படுவார்கள். மேலும் தேர்வு மையத்தில் ஆள்மாறாட்டம் செய் பவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். . தேர்வு மையத்திற்கு செல் லும் முன் மாணவர்களை தேர்வு மைய அறைக் கண்காணிப்பாளர் தீவிர சோதனை செய்து அனுப்ப வேண்டும். அதன்பின் துண்டு சீட்டு வைத்து எழுதியதாக பறக்கும் படையினரிடம் மாணவர்கள் பிடிபட்டால் தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை  மேற் கொள்ளப்படும். மாணவர்கள் ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபடாமல் தேர்வு எழுத வேண்டும்.  இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட் டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior