உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 29, 2010

அண்ணாமலைப் பல்கலை. மாணவர்கள் மூவர் சாவு ஏப்ரல் 30-க்குள் விசாரணை அறிக்கை தாக்கல்

 சிதம்பரம்:

                 சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் 3 பேர் ஆற்றில் விழுந்து இறந்த சம்பவம் குறித்து ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் தெரிவித்தார். 

                   அண்ணாமலைப் பல்கலை. பொறியியல் புல மாணவர் கவுதம்குமார் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி விபத்தில் இறந்ததை அடுத்த பல்கலையில் பயிலும் வடமாநில மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டு பல்கலைக்கழக கட்டடங்கள், பல்கலை. வேன் மற்றும் ஆட்டோக்களை சேதப்படுத்தினர். இச்சம்பவத்தின் போது, போலீஸôர் மாணவர்களை விரட்டியடித்த போது 3 பொறியியல் புல மாணவர்கள் முத்தையா நகர் அருகே உள்ள பாலமான் ஆற்றில் விழுந்து இறந்தனர். இச்சம்பவம் குறித்து தமிழக அரசு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட்டது.

                   அதன் பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் கடந்த மார்ச் 5-ம் தேதி முதல் சம்பவ இடங்களை பார்வையிட்டு விசாரணையை தொடங்கி நடத்தி வந்தார். சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் பல்வேறு தேதிகளில் பொது விசாரணை நடத்தினார். அப்போது அண்ணாமலைப் பல்கலை. இரவு காவலர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள், ஆட்டோ டிரைவர்கள், போலீஸôர், வடமாநில மாணவர்கள், தீயணைப்புத் துறையினர் மற்றும் உள்ளிட்டோரிடம் தனித்தனியே விசாரணை நடத்தினார். இந்நிலையில் இறுதிகட்டமாக சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 28) மாணவர்கள் உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், மாணவர்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். 

பின்னர்  மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் தெரிவிக்கையில் 

                  மாணவர்கள் சாவு சம்பவம் குறித்து விசாரணை முடியும் தருவாயில் உள்ளது. ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விசாரணை அறிக்கை அரசுக்கும் சமர்பிக்கப்படும் என தெரிவித்தார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior