உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 29, 2010

திறந்தவெளி பாரான 'வெள்ளாறு' பெண்கள், வாகன ஓட்டிகள் அச்சம்


திட்டக்குடி:

              வெள்ளாறு திறந்தவெளி 'டாஸ் மாக்' பாராக மாறி வருவதால் பெண்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
 
                 திட்டக்குடி நகர் புறத்தில் தாலுகா அலுவலகம் முன்புறம், பெருமுளை ரோடு செல்லும் வழி, கூத்தப்பன்குடிக்காடு ஆகிய மூன்று இடங்களில் அரசு மதுபான டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இங்கு திட்டக்குடி நகர் புற மற்றும் பல் வேறு கிராமங்களிலிருந்தும் 'குடி'பிரியர்கள் மது அருந்துவர். அதுமட்டுமின்றி பெரம்பலூர் மாவட்ட எல்லையான அகரம்சீகூர் 'டாஸ்மாக்' கடையும் உள்ளது. பெரும்பாலான 'குடி' பிரியர்கள் மாலை நேரத் தில் டாஸ்மாக்கில் வாங்கும் மதுபானங்களை காற்றோட்டமாக 'ஹாயாக' வெள்ளாற்றில் அமர்ந்து குடிக்கின்றனர். வெள்ளாற்றில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்ததால் அப்பகுதியில் 'சைடிஷ்' கடைகள் துவங்கப் பட்டு அமோகமாக வியாபாரம் நடக்கிறது. வெள் ளாற்றில் மது அருந்துபவர்கள் தரைப்பாலத்திலேயே தங்களது இரு சக் கர வாகனங்களை நிறுத் திவிட்டு செல்கின்றனர்.
 
                 இங்கு மேம்பாலமாக தரம் உயர்த்தப்பட்டு, கட்டுமான பணிகள் துவங்கி நடந்து வரும் நிலையில் அப்பகுதியில் கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதியடைகின்றனர். இதுபற்றி கேட்டால் வாகன ஓட்டிகள் தாக்கப்படுகின்றனர். தவிர வெள்ளாறு செல்லும் வழியில் திருமஞ்சன வீதி, ஆற்றங்கரை தெரு பகுதிகளில் வசிப்பவர்கள் வெள்ளாற்றின் அருகே திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இருள் சூழ்ந்த பின், இயற்கை உபாதைக்காக செல்லும் பெண்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள் ளது. 'குடி'போதையில் சில விஷமிகள் பெண்கள் மீது கல் வீசுவது, டார்ச் லைட் அடிப்பது போன்ற சில்மிஷங்களில் ஈடுபடுகின்றனர். மேலும் குடித்து விட்டு பிளாஸ்டிக் கப்புகள், பை, பாட்டில்கள் என அப்படியே வெள் ளாற்றில் வீசிவிட்டு செல்கின்றனர். நாளுக்கு நாள் 'குடி' பிரியர்கள் வெள்ளாற்றுக்கு வருவது அதிகரிப்பதும், அவர்களின் கொட்டமும் அதிகரித்து வருகிறது. இதற்கு யார் நடவடிக்கை எடுப்பது?

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior