உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 29, 2010

அனைத்து மாதங்களிலும் ரேஷன் பொருள்கள் வாங்க வேண்டுமென நிர்பந்தம் கிடையாது : கலெக்டர் சீத்தாராமன் விளக்கம்


கடலூர் : 

               ரேஷன் கார்டுதாரர்கள் அனைத்து மாதங்களிலும் பொருள்கள் வாங்க வேண்டும் என்ற நிர்பந்தம் கிடையாது என கலெக்டர் கூறியுள்ளார்.
இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பு: 

                 ரேஷன் கார்டில் தொடர்ந்து மூன்று மாதங் களாக பொருள்கள் வாங் காமல் இருந்தால் அந்த அட்டை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என்ற புகார் வந்துள்ளது. ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி பொருள்கள் வாங்குவதோ வாங்காமல் இருப்பதோ  கார்டுதாரர்களின் முழு உரிமை. ஆகையால் தொடர்ந்து பொருள் கள் வாங்காமல் இருக்கும் ரேஷன் கார்டுகள் நிறுத்தி வைக்கக் கூடாது.
                அதோடு பல மாதங்களாக வாங்காமல் தேவைப்படும் போது பொருள்கள் வாங்கச் செல்லும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொருள்கள் வழங்க மறுக்க கூடாது.  மேலும் அவர்களுக்கு தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும் நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே, ரேஷன் கார்டுதாரர்கள் அனைத்து மாதங் களிலும் பொருள்கள் வாங்க வேண்டும் என்ற நிர்பந்தம் கிடையாது. அவர்களுக்கு தேவையான சமயங்களில் தேவையான அத்தியாவசிய  பொருள்கள் ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது. இது சம்பந்தமாக குறைகள் இருப்பின் அட்டைதாரர்கள் 04142-230223 என்ற தொலைபேசி எண்ணில் மாவட்ட வழங்கல் அலுவலரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior