உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 29, 2010

திருப்பாதிரிப்புலியூரில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்க மக்கள் பிரதிநிதிகள் குரல் கொடுப்பார்களா

 கடலூர் : 

              விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதையில் செல்லும் புதிய ரயில்கள் கடலூரில் நிறுத்தம் இல்லாததால் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
 
               விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதையில் கடந்த 24ம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்படுகிறது. ஏற்கனவே இந்த பாதையில் இயக்கப்பட்ட சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் தற்போது மீண்டும் இயக்கப்படுகிறது. மாவட்டத் தலைநகரான கடலூரில் (திருப்பாதிரிப்புலியூர்) இருந்துதான் பல்வேறு இடங்களுக்கு அதிகமான பயணிகள் செல்வது வழக்கம். ஆனால் திருப்பாதிரிப்புலியூரில் சோழன் எக்ஸ்பிரஸ் நிற்காமல் செல்வதால் பயணிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதேபோல் வரும் மே 2ம் தேதி முதல் ராமேஸ்வரம் - புவனேஸ்வர் (எண். 8495), புவனேஸ்வர் - ராமேஸ்வரம் (எண் 4260), ராமேஸ்வரம் - புவனேஸ்வர் (எண் 4259), புவனேஸ்வர் - ராமேஸ்வரம் (எண் 8496) ரயில்கள் வரும் மே 2ம் தேதி முதல் இயக்கப்படவுள்ளது.  இந்த ரயில்கள் அனைத்தும் விழுப்புரம் ஜங்ஷனுக்கு பிறகு மயிலாடுதுறையில் மட்டுமே நிற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூரைக் கடந்து செல்லும் ரயில்கள் மாவட்ட தலைநகரான கடலூரில் நிற்காமல் செல்வதால் பயணிகள் கவலையடைந்துள்ளனர். எனவே திருப்பாதிரிப்புலியூரில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல மக்கள் பிரதிநிதிகள் குரல் கொடுக்க வேண்டும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior