உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 29, 2010

மானிய விலையில் நெல், உளுந்து விதைகள்

 பண்ருட்டி : 

               பண்ருட்டி வேளாண் விரிவாக்க மையத்தில் நெல், உளுந்து விதைகள் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படுகிறது.
 
                பண்ருட்டி வேளாண் விரிவாக்க மையத்தில் விதை கிராம திட்டத்தின் கீழ் ஏ.டி.டி., 45 ரகம் நெல் 50 சதவீத மானிய விலையில் ஒரு கிலோ 9 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டி.எஸ்., உளுந்து ரகம் 50 சதவீத மான்யவிலையில் 55 ரூபாய்க்கும், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஜிப்சம் உரம் 400 கிலோ 1,220.80ல் மானியம் 750 போக 471 ரூபாய்க்கும், சிங்க்கல் பேட் ஒரு கிலோ 33.30க்கு மானிய விலையில் 17.30 ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது. தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பூச்சிக் கொல்லி மருந்து அசாடிராக்டின் இரண்டரை லிட்டர் 268ல் இருந்து மானியம் 128 போக 140க் கும், பாசிலஸ் துரிஞ்சி அரை  லிட்டர் 379க்கும் 189 போக 190 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior