உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 29, 2010

காஸ் இணைப்பு பெறுபவர்களிடம் அடுப்பு வாங்க வற்புறுத்த கூடாது


பண்ருட்டி : 

              புதிய காஸ் இணைப்பு பெறும் போது அடுப்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்கத் தேவையில்லை என பாரத் காஸ் நிறுவன தஞ்சாவூர் மண்டல துணை மேலாளர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
 
பண்ருட்டியில் உள்ள காஸ் ஏஜன்சியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட பாரத் காஸ் நிறுவன தஞ்சாவூர் மண்டல துணை மேலாளர் முத்துசாமி கூறியதாவது: 

               பண்ருட்டி காஸ் நுகர் வோர் குறைகள் குறித்து ஆய்வு செய்தோம். நுகர்வோர் தேவைகேற்ற சிலிண்டர்களை ஏஜென் சிகள் சப்ளை செய்ய வேண்டும். நகரத்தில் சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் கிடையாது.  ஏஜென்சி குடோன் களில் இருந்து 5 கிலோ மீட்டர் தள்ளி உள்ள கிராமங்களுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 1.40 பைசா கூடுதல் கட்டணம் வசூல் செய்து கொள் ளலாம். சீராக சப்ளை செய்யாத ஜெயா காஸ் ஏஜன்சியில் இருந்து 4 ஆயிரம் இணைப்புகள் பண்ருட்டி ராதா மற்றும் நெய்வேலி ஏஜென்சிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும்  சேவை வழங்காததால் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. புதிய இணைப்பு மற்றும் மாற்றுதல் இணைப்பு பெறும் போது நுகர்வோர்களிடம் காஸ் அடுப்பு, சமையல் எண் ணெய் உள்ளிட்ட பொருட் கள் வாங்க நுகர்வோர்களை வற்புறுத்தக் கூடாது. நுகர்வோர் தங்களுக்கு சிலிண்டர் மட்டும் போதும் என  தெளிவாக கூற வேண்டும். மீறி வற் புறுத்தினால் எங்கள் அலுவலகத்திற்கு புகார் செய்யலாம். இவ்வாறு முத்துசாமி கூறினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior