உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 29, 2010

போலீசை கண்டித்து நோட்டீஸ் : சேத்தியாத்தோப்பில் பரபரப்பு


சேத்தியாத்தோப்பு :

               திருட்டு சம்பவங்களுக் குப் போலீசார் துணைபோவதைக் கண்டித்து சேத்தியாத்தோப்பில் பா.ம.க. சார்பில்  போலீசை கண் டித்து நோட்டீஸ் ஒட்டப் பட்டது.
 
                 சேத்தியாத்தோப்பில் போலீசாரை கண்டித்து கரிவெட்டி கிராம பொதுமக்கள், பா.ம.க., கிளை சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அதில் 'தமிழக அரசே நடவடிக்கை எடு! வேலியே பயிரை மேய்வதா? காவல்துறை திருட்டுக்குத்  துணை புரிவதா? கரிவெட்டியில் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத சேத்தியாத்தோப்பு காவல் துறையை வன்மையாக கண்டிக்கிறோம். தமிழக அரசே மாவட்ட நிர்வாகமே நடவடிக்கை எடு. இங்ஙனம் கிராம பொதுமக்கள், பா.ம.க. கிளை கரிவெட்டி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சேத்தியாத்தோப்பு பகுதியில் ஒட்டப்பட்ட இந்த நோட்டீஸ்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior