உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 29, 2010

கடலூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகம் ரூ.4.38 கோடியில் தயாராகி வருகிறது

கடலூர் : 

                கடலூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகம் 4.38 கோடி ரூபாயில் நவீன தொழில் நுட்பத்துடன் வேகமாக தயாராகி வருகிறது.
 
                       கடலூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தில் போக்குவரத்து, ஆயுத கிடங்கு, ஆயுதப்படை அலுவலகம் உட்பட பல பிரிவு  செயல்படுறது. இதனால் இட பற்றாக்குறையால் அமைச்சுப் பணியாளர்கள் தவித்து வந்தனர். இது தவிர பல இடங்களில் வாடகை கட்டடத்தில் காவல்துறை அலுவலகங்கள் செயல்படுகிறது. இந்த அலுவலகங்களை ஒருங்கிணைத்து ஒரே கட் டடத்தில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய அலுவலகம் கட்ட அரசு 4.38 கோடி ரூபாய் ஒதுக்கியது. அதன்படி பிரம்மாண்ட ஒருங்கிணைந்த மாவட்ட போலீஸ் அலுவலக கட் டட பணி  கடந்த செப்டம் பர் மாதம் துவங்கியது.  

                  ஒரு ஆண்டு காலத்தில் முழுவதும் முடிக்கப்பட்டு வரும் செப்டம்பர் மாதம் ஒப்படைக்கப்பட உள்ளது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் கம்பெனி கட்டடப் பணியை மேற்கொள்கிறது. இக் கட்டடம் மொத்தம் 32 ஆயிரம் சதுர அடியில் 3 தளங்களைக் கொண்டதாக அமைக்கப்படுகிறது. இதில் உள்ள அனைத்து அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு 'நெட்ஒர்க்'கில் இணைக்கப்படுவது சிறப்பம்சமாகும். இதுதவிர  கூட்டம் நடத்துவதற்கு நவீன வசதியுடன் கூடிய அரங்கு, பயிற்சி காவலர்களுக்கென கூட்ட அரங்கு அமைக்கப்படுகிறது. பல் வேறு இடங்களில் செயல் பட்டு வரும் காவல்துறை அலுவலகங்கள் இந்த புதிய கட்டடத்தில் செயல் படவுள்ளன.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior