உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 29, 2010

மங்களூர் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்

 சிறுபாக்கம் : 

             மங்களூர் ஒன்றிய கவுன்சிலர்களின் அவசர கூட்டத்தில் மானிய நிதியில் தேர்வு செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து கலந்தாய்வு நடந்தது.
 
              மங்களூர் ஒன்றிய கவுன்சிலர்களின் அவசர கூட்டம், ஒன்றிய வளா கத்தில் நடந்தது. சேர்மன் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். துணை சேர் மன் சின்னசாமி, ஆணையர்கள் ஜெகநாதன், ராஜாராம் முன்னிலை வகித்தனர். கருப்புசாமி வரவேற்றார். கூட்டத்தில் பிற்படுத்தப்பட்ட பகுதிக்கான மானிய நிதியில் தேர்வு செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து கவுன்சிலர்களுக்கு சுற்றறிக்கை வழங்கப்பட்டது. இதில் புதிய சமையலறை கட்டுதல், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளோருக்கு தொகுப்பு வீடுகள் வழங்குதல், மரம் நடுதல், மர வேலிகள் அமைத்தல், தடுப்பணைகள் கட்டுதல், முழு நேர ரேஷன் கடை கட்டடங்கள் கட்டுதல், நிரந்தர வெள்ள தடுப்பு கட்டுமான பணிகள் மேற் கொள்ளுதல் உள்ளிட்ட 21 பணிகள் தேர்வு செய்திட கலந்தாய்வு நடந்தது. பொறியாளர் மணிவேல், கவுன்சிலர்கள் சந்திரபாபு, ராஜன், பொன் முடி, மணிமொழி, சேகர், பூமாலை, அம்பிகா, கண்ணகி, கொளஞ்சி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior