உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 29, 2010

கால்நடை மருத்துவ முகாம்

 கடலூர் : 

                  ராமாபுரத்தில் நடந்த கால்நடை சிறப்பு மருத்துவ முகாமில் 1,170 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நீர் வள நில வள மேம்பாட்டுத் திட்டத்தில் கால்நடைகளுக்கு மலட்டுத் தன்மை நீக்கல் சிறப்பு மருத்துவ முகாம் கடலூர் அடுத்த ராமாபுரம் ஊராட்சியில் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். கால்நடைத்துறை ஆய்வாளர் ராஜமச்சேந்திரன் வரவேற்றார்.
 
                கால்நடைத் துறை மண் டல இணை இயக்குனர் இளங்கோவன் துவக்கி வைத்தார். கால்நடை மருத்துவர்கள் கமலக்கண்ணன், ராமமூர்த்தி, முருகேஸ்வரி, மோகன் உள்ளிட்ட குழுவினர் கால்நடைகளை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர். அதில் 622 கால் நடைகளுக்கு தடுப்பூசியும், 346 ஆடுகளுக்கு குடற் புழு நீக்கம், 74 பசுக்களுக்கு சினை பரிசோதனை, 25 பசுக்களுக்கு செயற்கை முறையில் கருவூட்டல், 38 கால்நடைகளுக்கு மலட்டுத்தன்மை நீக்கல் மற்றும் 65 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior