உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 29, 2010

சிதம்பரத்தில் தனித்தனி விபத்து மூன்று பேர் பலி: இருவர் காயம்

 சிதம்பரம் : 

                சிதம்பரத்தில் அடுத்தடுத்து நடந்த விபத்துகளில் மூன்று பேர் இறந்தனர். இருவர் காயமடைந்தனர்.
 
                  சென்னை புளியந்தோப்பு பிக்காஸ் சாலையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மோகன் (45). சீர்காழி தாண்டவன்குளத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்ல நேற்று முன் தினம் மாலை வந்தார். சிதம்பரம் பஸ் நிலையத்தில் சீர்காழி வழியாக செல்லும் தனியார் பஸ்சில் ஏறும்போது தவறி கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த அவரை சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு இறந்தார்.
 
மற்றொரு விபத்து: 

                       பு.உடையூரைச் சேர்ந்தவர் சந்தானம். இவரது மகன் மனோகர் (26), நண்பர் ராமச்சந்திரனுடன் மோட்டார் பைக்கில் சிதம்பரம் நோக்கி வந்தார். வடக்கு மெயின்ரோட்டில் எதிரில் சென்ற பஸ்சை முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரே வந்த ஆட்டோ மீது மோதி இருவரும் கீழே விழுந்தனர். பலத்த காயமடைந்த மனோகர் அதே இடத்தில் இறந்தார். ராமச்சந்திரன் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த இரு விபத்து குறித்தும் சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
மேலும் ஒரு விபத்து: 

                    தெற்கிருப்பு வெங்கடேசன் மகன் விஜய் (29). இவர் ராஜேஷ் என்பவருடன் சிதம்பரத்தில் இருந்து தெற்கிருப்பு நோக்கி மோட்டார் பைக்கில் சென்றார். பூலாமேடு அருகே சென்றபோது கார் மோதி இருவரும் தூக்கி எறியப்பட்டனர். இருவரையும் சிதம்பரம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது வழியில் விஜய் இறந்தார். ராஜேஷ் சிகிச்சை பெற்று வருகிறார்.  இது குறித்து சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior