உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 29, 2010

கோஷ்டி மோதல்: 9 பேர் கைது


சேத்தியாத்தோப்பு : 

                  சேத்தியாத்தோப்பு அருகே கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
 
                சேத்தியாத்தோப்பை அடுத்த மணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் இளையபெருமாள். இவரது மனைவி நிர்மலா ஊராட்சி தலைவராக உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்தவர் அரிதாஸ். அவர்கள் இருவரும் தனித்தனி கோஷ்டியாக செயல்படுகின்றனர். இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் இவ்விரு கோஷ்டியினரும் தாக்கி கொண்டதில் கிருஷ்ணமூர்த்தி, பாலசுப்ரமணியன் காயமடைந்தனர். இதுகுறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் தனித்தனியே வழக்குப் பதிந்து உதயகுமார் (28), கல்யாணசுந்தரம் (28), சதீஷ்குமார் (23), தில்லைகோவிந்தன் (34), கொளஞ்சிநாதன் (30), அரிகிருஷ்ணன் (28) உட்பட 9 பேரை கைது செய்தனர். மேலும் இளையபெருமாள், அரிதாஸ் உட்பட 10 பேரை தேடி வருகின்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior