உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 29, 2010

பெற்றோர்களின் விருப்பத்தை பிள்ளைகளின் மீது திணிக்கக் கூடாது: கி.வீரமணி

 நெய்வேலி:

                பெற்றோர்கள் தங்களது விருப்பங்களை பிள்ளைகளின் மீது திணிக்கக் கூடாது என நெய்வேலியில் நடைபெற்ற மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் தி.க.தலைவர் கி.வீரமணி பேசினார். பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் சார்பில் நெய்வேலி லிகனைட் ஹாலில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான வாகைச் சூட வாரீர் எனும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. 

இதில் பங்கேற்ற கி.வீரமணி பேசியது: 

                  பெற்றோர் தங்களது இளமைப் பருவத்தில் செய்ய வேண்டியது, தவறவிட்டு, அவற்றை தற்போது தங்களது பிள்ளைகள் மூலம் நிறைவேற்றிக் கொள்ள ஆசைபடுவது சரியானது அல்ல. பிள்ளைகளை சுதந்திரமாக சிந்திக்க விட வேண்டும். அவர்களின் கருத்துக்களை ஆராய்ந்து அவற்றின் சாதக பாதகங்களை எடுத்துக் கூறலாமே தவிர, தங்களது சொந்த விருப்பு வெறுப்புகளை பிள்ளைகள் மீது திணிக்கக் கூடாது என்றார் வீரமணி.

 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பிரமோஸ் விண்வெளி ஆராய்ச்சி மைய நிர்வாக இயக்குநர் எ.சிவதாணுப்பிள்ளை பேசுகையில், 

                 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் மனித ஆற்றலை சரியாக பயன்படுத்தினால், முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் கூறியது போன்று இந்தியா 2020 -ல் வல்லரசாக திகழும் என்றார். இதே போன்ற நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் வேலூர், ஈரோடு, தருமபுரி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், மயிலாடுதுறை, ஜெயங்கொண்டம் ஆகிய நகரங்களில் நடைபெற்றது. நெய்வேலியில் தொடங்கிய வாகைசூட வாரீர் நிகழ்ச்சி விடியோ கான்பரசிங் மூலம் மேற்கண்ட நகரங்களுக்கும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. பிற்பகலில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் விடியோ கான்பரசிங் மூலம் உரை நிகழ்த்தினார். முன்னதாக பெரியார் மணியம்மை பல்கலைக் கழக பேராசிரியர் விஜயக்குமார் வரவேற்றார். என்எல்சி அதிகாரிகள் சந்திரமோகன் மற்றும் செந்தமிழ்செல்வன் வாழ்த்துரை வழங்கினர். அதியமான்நெடுமான் அஞ்சி நன்றி கூறினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior