உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 29, 2010

சீர்காழி மெயின் ரோட்டில் விபத்தால் 'டிராபிக் ஜாம்'


சிதம்பரம் : 

                சிதம்பரம் அருகே சீர்காழி மெயின் ரோட்டில் குறுகலான பாலத்தில் பஸ்சும், லாரியும் உரசி விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து தடைபட்டது.
 
                 தென்மாவட்ட பகுதிகளான நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் செல் லும் முக்கிய சாலையாக சிதம்பரம் - சீர்காழி சாலை உள்ளது. சாலைகளின் பல இடங்களில் குறுகிய மற்றும் உடைந்த ஆபத்தான பாலங்கள் உள்ளதால்,  இப்பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. அதிகாரிகள்   நடவடிக்கை எடுக்காததால், விபத்துகள் தொடர் கின்றன. சிதம்பரம் - சீர்காழி சாலை அம்மாபேட்டை அருகே குறுகிய பாலம் வழியாக, ஒரு வாகனம் மட்டுமே செல்ல முடியும். நேற்று காலை அந்தப் பாலத்தை சிதம்பரத்தில் இருந்து சென்ற தனியார் பஸ்சும், மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரியும், ஒரே நேரத்தில், 'கிராஸ்' செய்தன. நடு பாலத்தில், இரண்டும் ஒன்றுடன் ஒன்று உரசிக் கொண் டன. லாரி மோதியதில், பாலத்தின் பக்கவாட்டுச் சுவர் உடைந்து விழுந் தது. இதனால், லாரியின் ஒருபக்க டயர், பாலத்தில் தொங்கியது.  உடன் ஜாக்கி மூலம் டயரை உயர்த்தி, பாதிப்பு  ஏற்படாமல் தடுத்தனர். லாரியும், பஸ்சும் சிக்கிக் கொண்டதால், அந்தச் சாலை வழியாக போக்குவரத்து தடைபட்டது. இதனால், சிதம்பரத்தில் இருந்து புறவழிச் சாலை வழியாக வாகனங்கள் அனைத்தும் திருப்பி விடப்பட்டன. மூன்று மணி நேரம் போராட்டத் துக்குப் பின், கிரேன் மூலம் பஸ்சும், லாரியும் பிரித்து எடுக்கப் பட்டு,  பிற்பகலில் இருந்து போக்குவரத்து துவங்கியது. பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன், இதற்கு நிரந்தர தீர்வு காண, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior