உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 29, 2010

கருப்பு சட்டை அணிந்து வந்த அ.தி.மு.க., கவுன்சிலர்கள் 5 நிமிடத்தில் முடிந்த பண்ருட்டி நகர மன்ற கூட்டம்

 பண்ருட்டி :

            பண்ருட்டி நகரமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 
                  பண்ருட்டி நகராட்சி கவுன்சிலர்கள் மாதாந்திர கூட்டம் நேற்று நடந்தது.  சேர்மன் பச்சையப்பன் தலைமை தாங்கினார்.  துணை சேர் மன் கோதண்டபாணி,  பொறியாளர் சுமதி செல்வி,  சுகாதார அலுவலர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அனைவரும் கருப்பு சட்டை, பேண்ட் அணிந்தும், பெண்  கவுன்சிலர்கள் கருப்பு சேலைகள் அணிந்தும் வந்தனர்.  கூட்டம் துவங்கியவுடன் தி.மு.க., கவுன்சிலர் ரகூப் தனது வார்டில் குடிநீர் பிரச்னை உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட பழைய பைப்களை மாற்றி புதியதாக அமைக்க வேண்டும் என்றார். தி.மு.க.கவுன்சிலர் தட்சணாமூர்த்தி 'துப்புரவு பணிகள் நடைபெறவில்லை. பணியாளர்கள் வருவதில்லை, சம்பளம் மட்டும் எப்படி வழங்குகிறீர்கள். மண்வெட்டி, சவுள் இல்லை என கூறுகின்றனர்' என்றார். அ.தி.மு.க.,கவுன்சிலர் பன்னீர் செல்வம் 'கடந்த கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கைக்காக பேசிய எங்கள் மீது  சேர்மன் கொடுத்த பொய் வழக்கு காரணமாக நாங்கள் நீதிமன்ற ஜாமீனில் வெளியில் வந் துள்ளோம். கவுன்சிலர் ரமாதேவி கொடுத்த புகாரில் சேர்மன் உள் ளிட்ட ஆறு தி.மு.க., கவுன்சிலர் மீது கொடுத்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு சேர்மன் ஜனநாயக முறையில் பதில் கூற வேண்டும். அதுவரை கூட்டம் நடத்த விடமாட்டோம்' என்றார்.  இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சேர்மன் பச்சையப்பன் தீர்மானம் நிறைவேறியதாக அறிவித்து விட்டு நகரமன்ற கூடத்தை விட்டு வெளியேறினர். அவரை தொடர்ந்து  தி.மு.க., காங்கிரஸ் கவுன்சிலர்கள்  வெளியேறினர்.  பின் அ.தி.மு.க., கவுன்சிலர்கள்  சேர்மன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், நகராட்சியின் சீர் கேட்டை  கண்டித்து நகராட்சி வாயில் முன் கோஷம் எழுப்பி கலைந்து சென்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior