உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 29, 2010

இந்தியாவின் முன்னோடி கிராமமான கீரப்பாளையத்தில் முடங்கியது வளர்ச்சித் திட்டங்கள்

 கீரப்பாளையம்:

              சிறந்த ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டு, முன் னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நேரடியாக வந்து சென்ற பெருமைக்குரிய கீரப் பாளையம் ஊராட்சியில் தற்போது அனைத்து வளர்ச் சித் திட்டங்களும் செயல்படுத்தப்படாமல் முடங்கிப் போய்யுள்ளது.
 
              சிதம்பரம் அடுத்த கீரப்பாளையம் ஊராட்சி இந்தியாவில் முன் னோடி கிராமமாக தேர்வு செய் யப்பட்டு, தூய் மையான கிராமம் என அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாம் விருது வழங் கினார். கிராமத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டும் சென் றார். அத்தனை பெருமைக்குரிய ஊராட்சியில் இன்று அனைத்தும் தலைகீழாக காணப்படுகிறது.   கீரப்பாளையம் ஊராட்சியில் 2005ம் ஆண்டு அரசு மூலம் 35 லட்சம் ரூபாய்  செலவில் விறகிலிருந்து மின் சாரம் தயாரிக்கும் திட்டத்தை அப்போதைய கலெக்டர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் மாஜி அமைச்சர் சண்முகம் துவக்கி வைத்தார்.
 
                 இத்திட்டத்தை  நிர்வகிக்கும் பொறுப்பு அப்பகுதி மகளிர் சுய உதவிக்குழுனரிடம் ஒப்படைக்கப் பட்டது. அதன் மூலம் கிடைத்த மின்சாரம் கீழகீரப்பாளையம் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற் றும்  தெருவிளக்கு எரிய பயன்படுத்தப்பட்டது. இவை அனைத்தும் ஆறுமாதம் கூட நிறைவடையாத நிலையில்  முறையான பராமரிப்பின்றி திட்டம் செயலிழந்தது. இதே போன்று ஜவகர் வேலை வாய்ப்புத் திட் டத் தில் 1997-98ல் கட்டப் பட்ட சமுதாய கழிவறை, குளியலறை கட்டடங்கள் மற்றும் அதனை பொதுமக்கள் பயன் படுத்துவதற்கு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் போடப் பட்ட  கைப்பம்பு என அனைத்தும் பாழானது.
 
                        ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் இரண்டு லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் செலவில் பொதுமக்கள் பயனடைய நவீன கட்டண கழிவறைகள் கட்டப்பட்டன. தற்போது அருகே உள்ள செப்டிக் டேங்க்கிலிருந்து கழிவு நீர் வெளியேறி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அக் ட்டடம் அருகே இயங்கி வரும் வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு தினசரி சான்றிதழ், பட்டா மாற்றம் உள்ளிட்ட சான்றுகளுக்காக வரும் பொதுமக்கள் மூக்கைப் பிடித் துச் செல்லும் அவல நிலையும் நோய் பரவும் அபாயமும் உள்ளது. அதுமட்டுமின்றி, கீழகீரப் பாளையம் பகுதியில் வசிக்கும் 700 குடும்பங்கள் பயனடையும் வகையில் 1996ம் ஆண்டு ஒரு லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. தற்போது அந்த மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியின் மேல்பகுதியில் இருந்த சிமென்ட் காரைகள் பெயர்ந்து வலுவிழந்தது.  இதனால் பொதுமக்ளுக்கு குடிநீர் வழங்குவது கடந்த இரண்டு மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடும் செய்து தராததால் பொதுமக்கள் குடிநீருக்கு அல்லாட வேண்டிய நிலை உள்ளது. முன்னாள் ஜனாதிபதி கையால் இந்தியாவிலேயே சிறந்த ஊராட்சிக்கான ஜனாதிபதி விருது வாங்கிய கீரப்பாளையம் இன்று திட்டங்களை முறையாக செயல்படுத்தாததால் முற்றிலும் முடங்கியது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior