உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 29, 2010

தொழிலாளர் தினத்தில் கிராம சபைக் கூட்டம் : ஊராட்சி தலைவர்களுக்கு கலெக்டர் உத்தரவு

 கடலூர் : 

            தொழிலாளர் தினத்தையொட்டி அனைத்து கிராம ஊராட்சி தலைவர்களும் கிராம சபைக் கூட்டம் நடத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
 
                   மே முதல் தேதி தொழிலாளர் தினத்தையொட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும். கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ள இடம், தேதி, நேரம் மற்றும் விவாதிக்கப்படவுள்ள பொருள்கள் பற்றி ஊராட்சி மன்ற கட்டடத்திலும், தொலைக் காட்சி அறை, சமுதாயக் கூட கட்டடங்களிலும் மக்கள் பார்வையில் தெரியும் படி விளம்பர பலகையில் எழுதியும், துண்டு பிரசுரங்கள் மூலமாகவும் விளம்பரப்படுத்த வேண்டும். இக் கூட்டத்தில் 'கான்கிரீட்' வீட்டு வசதித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் சமூக தணிக்கை செய்தல், 2010-11ம் ஆண்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் தேர்ந் தெடுக்கப்பட்டு தொழில் நுட்ப அங்கீகாரம் பெறப்பட்ட பணிகளை கிராம சபையில் வைத்து அங்கீகரித்தல், பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்க வேண்டும். இந்த பணியை மேற் பார்வையிட ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் ஒரு பற்றாளர் அனுப்பப்படுகின்றனர். கூட்டத்தில் உள் ளாட்சி பிரதிநிதிகள், சுய உதவிக்குழு மற்றும் பொது மக்கள் பங்கேற்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior