உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 29, 2010

அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட திட்ட இயக்குனர் ஆய்வு


விருத்தாசலம் : 

                  விருத்தாசலம் பகுதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணியிடங்களை மாவட்ட திட்ட இயக்குனர் பார்வையிட்டார்.
 
                    விருத்தாசலம் ஒன்றியத்தைச் சேர்ந்த ராஜேந்திரபட்டினம், டி.வி.புத்தூர், கருவேப்பிலங்குறிச்சி, எடச்சித்தூர் ஆகிய ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் வளர்ச்சி பணிகள் நடைபெற உள்ளது. பணிக்காக தேர்வு செய்யப்பட்ட இடங்களை மாவட்ட திட்ட இயக்குனர் ராஜஸ்ரீ பார்வையிட்டார். பின்னர் காட்டுப் பரூர், சத்தியவாடி, விசலூர் ஆகிய ஊராட்சிகளில் நடைபெறும் பணிகளையும், பாரத் நிர்மான் திட்டத்தின் கீழ் ராஜேந்திரபட்டினத்தில் இருந்து கொக்கரசம் பேட்டை வரை அமைக்கப்படும் தார்சாலை பணியையும் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தினார். பி.டி.ஓ., ஆதிலட்சுமி, கலியபெருமாள், பொறியாளர் காமராஜ், பணி பார்வையாளர்கள் செந்தில்நாதன், வீரப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior