உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 29, 2010

வெள்ளாற்று பாலம் இணைப்பு சாலை பணியில் தொய்வு : புறவழிச்சாலை பயன்பாட்டிற்கு வருவதில் தாமதம்

 சிதம்பரம் : 

              சிதம்பரம் வெள்ளாற்று பாலம் இணைப்பு சாலை பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் பி.முட்லூர்- சிதம்பரம் வரை புறவழிச்சாலை பயன்பாட்டிற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
 
                 சிதம்பரம் புறவழிச் சாலை பணி 2004ம் ஆண்டு துவங்கி தற்போது தான்  இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.  நில ஆர்ஜிதம், சாலையோர மரங்கள் வெட்டியது, கட்டடங்கள் இடித்தது என மூன்று ஆண்டுகள் காலம் கடந்து விட்ட நிலையில், பி.முட் லூர்-சிதம்பரம் இடையே ரூ.10 கோடி மதிப்பில் வெள்ளாற்று பாலம் பணி 2007ம் ஆண்டு துவங்கியது. ஆற்றில் அதிக தண்ணீர் ஓடியதால் மிதவை படகுகள் மூலம் 140 அடி ஆழத்திற்கு போர்வெல் போட்டு மண் பரிசோதனை நடத்தப் பட்டது. அதையடுத்து 310 மீட்டர் நீளம், 11.2 மீட்டர் அகலத்தில் பாலம் கட்டும் பணி துவங்கியது. பில்லர் அமைக்கப்பட்டு அதன் மேல் 10 ஸ்பேன் மற்றும் 140 கர் டர்கள் என ரெடிமேடாக செய்து பொருத்தப் பட்டு 2009ம் ஆண்டே போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் தார் தளம் போடப்பட்டு  தயாராகி விட்டது.
 
                பாலம் பணி முடிந்து பல மாதங்கள் கடந்து விட்டது. பாலத் தில் இருந்து இணைப்பு சாலை  20 அடி உயரத்திற்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இருபுறமும் உயர்த்த வேண்டிய நிலையில் பணி தொடர்ந்து மந்தமாகவே நடந்து வருகிறது.  தற் போது செம்மண் கொட்டி ஒரு வாகனம் செல் லும் அளவிற்கு பாலத்திற்கு இணைப்பு கொடுக்கப்பட் டுள்ளது. பி.முட்லூர் தீர்த்தாம் பாளையத்தில் இருந்து சிதம்பரம் வண்டிகேட் வரையில் 6.5 கி.மீ., தூரத் தில் சி.முட்லூரில் இருந்து வண்டிகேட் வரை 3.5 கி.மீ., சாலை தார் போடப்பட்டும், சாலையை ஒழங் குபடுத்த மார்க்கிங், சாலை அரிப்பு ஏற்படாமல் இருக்க புற்கள் பதிக்கப்பட்டு வருகிறது. முக் கியமான இடங்களில் பாறாங் கற்கள் கொண்டு பக்கவாட்டு சிலாப் அமைக் கப்பட்டு வருகிறது.
 
                  மூன்று கி.மீ., தூரமான பி.முட்லூர்- சி.முட்லூர் வரை பாலத்தின் இரு புறமும்  அரை கி.மீ., தூரத் திற்கு செம்மண் கொட்டி உயர்த்தும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. செம்மண் பாதையில் கடந்த இரண்டு மாதங்களாக மிகுந்த சிரமத்திற்கிடையே வாகனங்கள் சென்று வருகிறது. பி.முட்லூரில் இருந்து சிதம்பரத்திற்கு புவனகிரி வழியாக 16 கி.மீ., தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலையில் புறவழிச்சாலை வழியாக எட்டு கி.மீ., குறைந்து விடும்.  அத்துடன்  போக்குவரத்து நெரிசல் முற்றிலுமாக தவிர்க் கப்படுவதால், சிரமமாக இருந்தாலும் இச்சாலையில் விரும்பிச் செல்கின்றனர். பி.முட்லூர்- சி.முட்லூர் வரை சாலைப் பணியை விரைவில் முடித்து பயன் பாட்டிற்கு திறந்துவிட் டால் கடலூர் மார்க்கமிருந்து வரும் வாகனங்கள் மட்டுமல்லாது கிள்ளை, சி.முட்லூர், பரங்கிப் பேட்டை, பு.முட்லூர் சுற்றுப் பகுதியை சேர்ந்த 40க் கும் மேற்பட்ட கிராம மக்கள் பெரிதும் பயனடைவர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior