உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 22, 2010

அண்ணா விளையாட்டரங்கில் 3வது நீச்சல் பயிற்சி துவங்கியது

கடலூர் : 

            கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் கோடைகால மூன்றாவது நீச்சல் பயிற்சி முகாம் துவங்கியது.
 
          கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் ஆறு பிரிவுகளாக நடக்கிறது. 15 நாள் கொண்ட முதல் பயிற்சி முகாம் மார்ச் 17ம் தேதியும், இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் ஏப்ரல் 1ம் தேதியும் துவங்கி முடிவடைந்தன. மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி முகாம் 20ம் தேதி துவங்கியது. பயிற்சி கட்டணம் 250 ரூபாய். பயிற்சிகள் காலை 7 முதல் 8 மணி வரையும், 8 முதல் 9 மணி வரையும், 9 முதல் 10 மணி வரையும், மாலை 3 முதல் 4 மணி வரையும், 4 முதல் 5 மணி வரையும், 5 முதல் 6 மணி வரையும் நடக்கிறது.  மேலும் காலை 6 முதல் 12 மணி வரையும், மாலை 4 முதல் இரவு 7 மணி வரையும் பொது மக்கள் குளிப்பதற்கு கட்டணமாக ஒரு மணி நேரத்திற்கு 20 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். பயிற்சியாளர் அருணா நீச்சல் பயிற்சி அளிக்கிறார். நான்காவது முகாம் மே மாதம் 1ம் தேதியும், ஐந்தாவது முகாம் 16ம் தேதியும், ஆறாவது முகாம் ஜூன் 1ம் தேதியும் நடக்கிறது.


பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior