உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 22, 2010

சிதம்பரம் நகரில் வைக்கப்பட்டிருந்த 'டிஜிட்டல்' பேனர்கள் அகற்றம்


சிதம்பரம் : 

             சிதம்பரம் நகர வீதிகளில் வைக்கப்பட்டிருந்த 'டிஜிட்டல்' பேனர்கள் நேற்று அகற்றப்பட்டன.
 
               சிதம்பரம் நகரில் பிரதான நான்கு வீதிகளிலும் அதிக அளவில் 'டிஜிட்டல்' பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. பல இடங்களில் மாதக்கணக்கில் கூட சில 'டிஜிட்டல்' பேனர்கள் அகற்றப்படாமல் இருந்து வந்தது. இதனால் மாவட்டம் முழுவதும் நீண்ட நாட்களாக இருந்த 'டிஜிட்டல்' பேனர்களை அகற்ற போலீசார் முடிவு செய்தனர். அதன்படி சிதம்பரம் பகுதிகளில் நேற்று 'டிஜிட்டல்' பேனர்கள் அகற் றப்பட்டது. நகர இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கண்ணபிரான், சப் இன்ஸ்பெக்டர் மதிவாணன் மற்றும் போலீசார், நகராட்சி ஊழியர்கள் உதவியுடன் நகரின் நான்கு வீதிகளிலும் அரசியல் கட்சியினர் மற்றும் தனியார் நிறுவனங்களின் சார்பில் வைக் கப்பட்டிருந்த 'டிஜிட்டல்'  பேனர்களை அகற்றினர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior