உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 22, 2010

அங்கன்வாடி பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி

 கடலூர் : 

             அங்கன்வாடி பணியாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி அண்ணாகிராமத்தில் நடந்தது.
 
                      கடலூர் வட்டம் கிராமப்புற குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலக கட்டுப்பாட்டில் பணிபுரியும் 142 அங்கன்வாடி பணியாளர்களுக்கும் அண்ணாகிராமம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலக கட்டுப்பாட்டில் பணிபுரியும் 18 பணியாளர்களுக்கும் 2 கட்டமாக 4 பிரிவுகளாக புத்தாக்க பயிற்சி நடந்தது. திட்ட அலுவலர் அன்பழகி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பெண்கள் மற்றும் குழந்தைகள் உயிர் வாழ்தல் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளவை, சமூக பாலின பாகுபாடு, ஆலோசனை வழங்கும் திறன், உணர்வு பூர்வமான அறிவு, ஆளுமை திறன், உணர்வு மேம்பாடு, பேரிடர் மேலாண்மை எதிர் கொள்ளுதல், குழந்தைகள் பராமரிப்புபோன்ற தலைப்புகளில் பயிற்சி நடத்தப் பட்டது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior