உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 22, 2010

சிறைக் கைதி ஓட்டம் காவலர் சஸ்பெண்ட்

 கடலூர் : 

                    உளுந்தூர்பேட்டை கிளைச் சிறையிலிருந்து சாராய வியாபாரி தப்பியது தொடர்பாக சிறை காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
 
               உளுந்தூர்பேட்டை எலவனாசூர்கோட்டை அடுத்த எறையூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பன் மகன் மோயிஸ் (35). சாராய வியாபாரியான இவர் கடந்த 13ம் தேதி உளுந்தூர்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.  19ம் தேதி மாலை சிறையின் பின்பக்க சுவர் வழியாக தப்பியோடினார். இது குறித்த புகாரின் பேரில் உளுந்தூர் பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து தப்பியோடிய மோயிசை தேடி வருகின்றனர். இந்நிலையில் கிளை சிறையிலிருந்து தப்பியோடி சம்பவம் குறித்து கடலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆனந்த்  விசாரணை நடத்தி சிறை முதல் நிலை காவலர் சிவபிரகாசத்தை சஸ்பெண்ட்  செய்து உத்தரவிட்டார். மேலும் கிளைச் சிறை கண்காணிப்பாளர் குப்பன், முதல்நிலை தலைமை காவலர் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior