உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 22, 2010

திட்டக்குடியில் ஆர்.டி.ஓ., திடீர் ரெய்டு இரண்டு மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

 திட்டக்குடி : 

                திட்டக்குடியில் ஆர்.டி.ஓ., தலைமையிலான வருவாய்த் துறையினர் நடத்திய திடீர் ரெய்டில் பதுக்கி வைத்திருந்த இரண்டு மூட்டை ரேஷன் அரிசியை கைப்பற்றினர்.
                 திட்டக்குடி பகுதியில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி, பருப்பு பதுக்கல் செய்யப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில், நேற்று காலை விருத்தாசலம் ஆர்.டி.ஓ., முருகேசன், வட்ட வழங்கல் அலுவலர் வேலு, வருவாய் ஆய்  வாளர் முருகன் ஆகியோர் திடீர் ரெய்டு நடத்தினர். அப்போது போஸ்ட் ஆபீஸ் ரோட்டிலுள்ள காமராஜ் என்பவரது வீட்டின் முன் கேட்பாரற்று கிடந்த ரேஷன் அரிசி 45 கிலோ எடையிலான மூட்டை ஒன்றும், திட்டக்குடி நுகர்பொருள் வாணிப கிடங்கு அருகில் சுப்பிரமணியன் என்பவரது வீட்டில் கிடைத்த 43 கிலோ அரிசி மூட்டையையும் கைப்பற்றினர். கைப்பற்றிய அரிசி மூட்டைகளை நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior