உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 22, 2010

வடக்குத்து ஊராட்சி மன்ற செயல்பாடுகள் புகார் குறித்து இன்று விசாரணை

 கடலூர் : 

               குறிஞ்சிப்பாடி அருகே வடக்குத்து ஊராட்சி மன்ற செயல்பாடுகள் தொடர்பான புகார்கள் குறித்து விசாரணை இன்று 22ம் தேதி நடக்கிறது.
 
                 குறிஞ்சிப்பாடி வட்டம், வடக்குத்து ஊராட்சி மன்றத்தால் ஊராட்சிப் பகுதிகளில் குடிநீர் இணைப்பு, வரைபடம் அனுமதி வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற் றதாக புகார் வரப்பட்டதன் பேரில், கடலூர் உதவி இயக்குனர் (தணிக்கை), தேசிய வேலை வாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
 
                இக்குழு புகார் குறித்து பொதுமக்களிடம் 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை வடக்குத்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விசாரணை நடத்துகிறது. எனவே மேற்கண்ட பொருள் தொடர்பான புகார்களை பொது மக்கள் நேரிலோ அல்லது மனுக்கள் மூலமாகவோ மாலை 5 மணிக்குள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விசாரணை அலுவலர்களிடம் தெரிவிக்கலாம் என கலெக்டர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior