உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 22, 2010

கால்வாய் நடுவில் மின் கம்பங்கள் சாக்கடை நீர் தேங்கும் அவலம்

 விருத்தாசலம் : 

                      எம்.ஆர்.கே., நகரில் மின் கம்பங்கள் இருப்பது தெரிந்தும் கால்வாய் கட்டப்பட்டுள்ள அவலம் நடந்துள்ளது. விருத்தாசலம் ஆலடிரோடு அருகில் எம்.ஆர். கே., நகர் உள்ளது. இதில் தாமரை குளம் தெருவில் மழைநீர் மற்றும் வீட்டு கழிவுநீர் வெளியேறுவதற்கு சாலை ஓரம் புதிதாக கால்வாய் அமைக்கப்பட் டது. அந்த கால்வாய்கள் தெரு ஓரம் இருந்த மின் கம்பங்களை தவிர்த்து ஒதுக்கி அமைக்காமல் கால்வாய் கட்டியுள்ளனர்.
 
                  இதனால் கால்வாய் வழியாக ஓடும் கழிவுநீர் முழுமையாக வடிந்து ஓடாமல் தேங்கும் நிலை உள்ளது. மழைக் காலங்களில் மழை தண்ணீர் கால் வாய் வழியாக ஓடும் போது நடுவில் இருக்கும் மின் கம்பங்களால் தடுக்கப்பட்டு கால்வாய் வழிந்து சாலையில் மழை நீர் ஓடும் நிலை உள்ளது. மக்கள் பயன்பாட்டிற்கு கட்டப்பட்ட  கால்வாயை கொஞ்சம் கூட யோசனையின்றி புத்திசாலித்தனமின்றி பயனற்ற முறையில் கட்டியிருக்கும் ஒப்பந்ததாரர்களையும், அதற்கு அனுமதி அளித்த அதிகாரிகளையும் நினைத்து அப்பகுதி மக்கள் சிரிப்பதா? அழுவதா என தெரியாத நிலையில் உள்ளனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior