உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 22, 2010

கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி ஆண்டு விழா

 கடலூர் : 

                  கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியின் ஆண்டு விழா மற்றும் மாணவியர் விடுதி திறப்பு விழா நடந்தது.
 
                கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி ஆண்டு விழா மற்றும் மாணவியர் விடுதி திறப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. பச்சையப்பன் அறக்கட்டளை தலைவர் ஜசரி கணேஷ் தலைமை தாங்கி  37.5 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மாணவியர் விடுதியை திறந்து வைத்தார். கல்லூரி முதல்வர் வள்ளி வரவேற்றார்.  சிறப்பு விருந்தினர் பச்சையப்பன் அறக்கட்டளை நிதி அறங்காவலர் வெற்றி அழகன், மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.
 
                விழாவில் அறக்கட்டளை நிர்வாகிகள் சிவசுப்ரமணியன், காட்டூர் சம்பத், சரவணன், பரமசிவம், சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில்  2008-2009ம் கல்வி ஆண்டில் அனைத்து வகுப்புகளிலும் முதல் இரண்டு இடங்களை பெற்ற மாணவிகள் கல்வி திறன் பரிசுகள் வழங்கப் பட்டது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior