உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 22, 2010

பிளாஸ்டிக் பைகள் அகற்றும் பணி

 நெய்வேலி:

               தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் நெய்வேலி நகரில் பிளாஸ்டிக் பைகள் அகற்றும் முகாம் செவ்வாய் மற்றும் புதன்கிழமை நடைபெற்றது. நெய்வேலி நகரில் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்த என்எல்சி நகர நிர்வாகம் தடைவிதித்தது. வணிக நிறுவனங்கள் பாலிதீன் பைகளை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியது. இந்நிலையில் நெய்வேலி நகரில் குப்பைகளோடு குப்பையாக கலந்துள்ள பாலிதீன் பைகளை அகற்ற என்.எல்.சி. நகர நிர்வாகம் முடிவு செய்து. அதன்படி பிளாஸ்டிக் தவிர்ப்பு இயக்கம் ஒன்றை உருவாக்கி, அந்த இயக்கத்தின் மூலம் தன்னார்வத் தொண்டு நிறுவன உதவியுடன் பாலிதீன் பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி செவ்வாய்க்கிழமை பாலிதீன் பைகள் அகற்றும் பணியினை என்எல்சி நிர்வாகத்துறை இயக்குநர் பி.பாபுராவ் தொடங்கி வைத்தார். இந்த பணியில் என்.எல்.சி. சுகாதாரத்துறை ஊழியர்கள், நெய்வேலி ஈஷா தொண்டு நிறுவன ஊழியர்கள் மற்றும் மக்கள் சேவை இயக்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஜவகர் அறிவியல் கல்லூரியின் சுற்றுச்சூழல் அறிவியல் துறை மாணவர்கள் என 400 பேர் களமிறங்கி ஈடுபட்டுள்ளனர்  என என்எல்சி நகர நிர்வாக முதன்மைப் பொது மேலாளர் சி.செந்தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior