உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 22, 2010

லாரன்ஸ் ரோட்டில் 'சப் வே' அமைப்பதில் சிக்கல்! நிலம் ஆர்ஜிதம் செய்ய ரூ.3 கோடி தேவையாம்

 கடலூர் : 

           மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கடலூர் ரயில்வே சுரங்கபாதை அமைப்பதில் திடீர் சிக் கல் ஏற்பட்டுள்ளது. நில ஆர்ஜித பணிக்கு மூன்று கோடி ரூபாய் பணம் தேவைப்படுகிறது.
 
            கடலூர் நகரமன்ற கூட்டம் நேற்று நடந்தது. இதில் திருப்பாதிரிபுலியூரில் ரயில்வே சுரங்க பாதை அமைப்பது சம்மந்தமாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்திற்கு சேர்மன் தங்கராசு தலைமை தாங்கினார். துணை சேர்மன் தாமரைச் செல்வன், கவுன்சிலர்கள்,  கமிஷனர் குமார் மற்றும் பொறியாளர் மனோகரசந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
 
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
 
சேர்மன் தங்கராசு: 

              பாதாள சாக்கடை திட்டபணி 2010ல் முடிவடையும். நகராட்சியில் சிங்காரத்தோப்பு, தேவனாம் பட்டினம், அக்கரை கோரி உட்பட 12 வார்டுகள் கடலோர பகுதிகள் என்பதால் இங்கு பாதாள சாக்கடை திட்ட பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை. திருப்பாதிரிபுலியூர் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க குறைந்த பட்சம் 20.5 மீட்டர் அகலம் தேவை படுகிறது. இதில் தற்போது 11 மீட்டர் சாலையே உள்ளது. மீதமுள்ள இடத்திற்கு இப் பகுதியில் நில ஆர்ஜிதம் செய்ய மூன்று கோடி ரூபாய் தேவைப்படுகிறது. ரயில்வே சுரங்கபாதை அமைப்பது சம்மந்தமாக கலெக்டர் தலைமையில் தொண்டு நிறுவனங்கள், பொது மக்கள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் முன் னிலையில் கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும்.
 
கவுன்சிலர் கோவலன்: 

          சுரங்கப்பாதையில் எந்தெந்த வாகனங்கள் செல்லலாம். வாகனங்களை எங்கு நிறுத்துவது.
 
சேர்மன்: 

          இரண்டு சக்கர வாகனங்கள், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் செல்லலாம். சுரங் கபாதையின் உயரம் 9 அடி என்பதால் பஸ், லாரி உள் ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாது.
 
சரளா: 

           செல்லங்குப் பம், சிவானந்தபுரம் பகுதியில் குப்பைகள் கொட்டப் பட்டு வாரப்படாமலும், சாக்கடை சுத்தம் செய்யப் படாமல் உள்ளது.
 
ராதாகிருஷ்ணன்: 

               கொசு மருந்து அடிப்பதற்கு மேலும் 11 மிஷின்கள் வாங்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அதற்கு பதிலாக இரண்டு மாதத்திற்கு ஒரு முறை அடிக்கப்படும் கொசு மருந்தை, 15 நாட்களுக்கு ஒரு முறை அடித் தாலே கொசுக்கள் ஒழிந்துவிடும். இதற்கு நகராட்சி நிர்வாகம் கொசு மருந்து வாங்கிக் கொடுத் தால் போதும். 17வது வார்டில் பாதாளசாக்கடை பணிக்கு பள்ளம் தோண்டப்பட்டு சரியாக முடிக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது.
 
கமலநாதன்: 

            பாஷியம் ரெட்டித் தெருவில் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படாமல் உள்ளது. இது குறித்து வாட்டர் போர்டு அதிகாரிகளிடம் தெரிவித்தால் சரியான பதிலை கூறாமல் போனை துண்டித்து விடுகின்றனர். கவுன்சிலர்களுக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டது.
 
துணை சேர்மன் தாமரைச் செல்வன்: 

               கடலூர் பகுதியில் அரசியல் கட்சிகள் வைக்கும் பேனர்கள் போலீசாரிடம் அனுமதி பெற்றே வைக்க வேண்டியுள்ளது. இதற்கு பதில் நகராட்சியில் அனுமதி பெற்று டிஜிட்டல் பேனர்கள் வைக்க தீர்மானம் கொண்டுவர வேண்டும். நகராட்சி வருவாய் அதிகாரிகள் வரி வசூல் செய்யும் போது ஒரு வீட்டிற்கும், இன்னொரு வீட்டிற்கும் ஏற்றத்தாழ்வு உள்ளது.  இதனால் நகராட்சி அதிகாரிகள் வரி வசூல் செய்யும் போது கவுன்சிலர்களையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior