உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 22, 2010

'டாஸ்மாக்' இடமாற்றம் செய்ய சமூக பாதுகாப்பு பேரவை கோரிக்கை

 சிதம்பரம் : 

             சிதம்பரம் கோவில் அருகே உள்ள 'டாஸ்மாக்' கடையை இடமாற்றம் செய்ய பிற்படுத்தப்பட்டோர் சமூக பாதுகாப்பு பேரவை அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
 
இது குறித்து பேரவை தலைவர் திருநாவுக்கரசு  கலெக்டர் சீத்தாராமனுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: 

                      சிதம்பரம் மாலைக் கட்டித் தெருவில் கோவில் அருகே அரசு 'டாஸ்மாக்' கடை உள்ளது.  இப்பகுதியில் கோவில் மற்றும் நகராட்சி நடுநிலைப் பள்ளி உள்ளது. இதனால் பக்தர்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் பெரும் இடையூறாக உள்ளது. 'குடி'பிரியர்கள் குடித்து விட்டு போக்குவரத்திற்கு இடையூறாக நின்று கொண்டும், கோவிலுக்கு செல்லும் பெண்களை கேலி செய்தும் வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெண்கள் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் உள்ள 'டாஸ்மாக்' கடையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior