உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 22, 2010

மனித சங்கிலி போராட்டம்


கடலூர் : 

           சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி  தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
                 மாவட்ட தலைவர் ரங்கசாமி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் ராமச்சந்திரன், ராஜேந்திரன், மல்லிகா, அரசன், மச்சேந்திரன், பானுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் அன்பழகன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாநில துணைத் தலைவர் ராமநாதன் சிறப்புரையாற்றினார். மனித சங்கிலியில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் காசிநாதன், மாவட்ட செயலா ளர் பாலசுப்ரமணியன், வங்கி ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் மருதவாணன், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் ஆதவன், அய்யாசாமி உள்பட பலர் பங்கேற்றனர். சத்துணவு திட்டத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக் குழுவால் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior