உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 22, 2010

சிதம்பரம் கோ- ஆப்டெக்சில் கோடை விற்பனை கண்காட்சி


சிதம்பரம் : 

                  சிதம்பரம் கோ-ஆப்டெக்சில் கோடை கால விற்பனை கண்காட்சி நேற்று துவங்கியது.
 
            சிதம்பரம் மேலவீதியில் கோ-ஆப் டெக்ஸ் துணி விற்பனை நிலையத்தில் பண்டிகை மற்றும் கோடை காலங்களில் சிறப்பு விற்பனை மற்றும் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கோடை கால விற்பனை மற்றும் கண்காட்சி நேற்று துவங்கியது. அண்ணாமலை பல்கலைக்கழக பி.ஆர்.ஓ., செல்வம் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
 
                  இந்த ஆண்டு கோடை காலத்திற் கென தோப்பூர், வனவாசி, கோயமுத்தூர், மதுரை, அருப்புக்கோட்டை போன்ற புகழ்மிக்க கைத்தறி சேலைகள், புதிய டிசைன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் சாமுத் திரிகா பட்டு சேலைகளும் இடம் பெற்றுள்ளது. அதே போன்று ஆண்களுக்கான காட்டன் ரெடிமேட் சட்டை புதிய டிசைன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  சிதம்பரம் கோ-ஆப்டெக்சின் இந்த ஆண்டு ஒரு கோடியே 16 லட்சம் ரூபாய் விற்பனை இலக்கு வைக்கப் பட்டுள்ளது என வட்டார மேலாளர் கிருஷ்ணன் தெரிவித்தார். நிகழ்ச்சியில் விற்பனை நிலைய மேலாளர் தில்லை மதிவாணன், கவுரி கடலூர் மண்டல உற்பத்தி மேலாளர் ஜெயபால் பங்கேற்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior