உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 18, 2010

பிளஸ் 2 தேர்வில் பெண்ணாடத்தை சேர்ந்த மாணவி அரியலூர் மாவட்டத்தில் 2ம் இடம்

திட்டக்குடி: 

                  பெண்ணாடத்தை சேர்ந்த மாணவி, பிளஸ் 2 தேர்வில் அரியலூர் மாவட்டத்தில் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை புரிந்துள்ளார். அரியலூர் மாவட்டம் ஆலத்தியூர் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி பானுப்ரியா பிளஸ் 2 தேர்வில் 1162 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தையும், பள்ளியில் முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் தமிழில் 190, ஆங்கிலம் 188, இயற்பியல் 191, வேதியியல் 194, கணிதம் 200, கம்ப்யூட்டர் சயின்ஸ் 199 மதிப்பெண் பெற்றுள்ளார். மாணவி பானுப்ரியாவை அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆப்ரகாம், பள்ளி முதல்வர் ராதாரவீந்திரன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினர். மாணவி பானுப்ரியா பெண்ணாடத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior